
சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னால் நடந்த சுவாரஸ்ய கதையை அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், " ஆட்டத்தின் 3வது நாள் முடிந்தவுடன், நான் ஹோட்டலின் நீச்சல் குளத்திற்கு நான் சென்றேன். அங்கு வங்கதேச வீரர்கள் மெஹிடி ஹாசன் மிராஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் என்னிடம் ஜாலியாக கிண்டலடித்து பேசினர்.

என்ன ஆனது
அவர்கள், "இந்தியாவை காப்பாற்ற இன்றே நீங்கள் வருவீர்கள் என நினைத்தோம், நாளை உங்களை மட்டும் வீழ்த்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என கூறினார்கள். மேலும் மிர்ப்பூரின் களத்தை பொறுத்தவரையில் இலக்கை விரட்டுவது என்பது முடியவே முடியாத காரியம். எவ்வளவு குறைந்த ஸ்கோரையும் அடிப்பது சிரமம் தான் எனக்கூறினர்.

அஸ்வின் தந்த பதில்
அதற்கு பதிலளித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், " நானும் இதே களத்தில் தான் பந்துவீசினேன். 35வது ஓவர் வரை பொறுத்திருங்கள். அதன்பின் பந்தின் தன்மை மாறி, பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும். எப்படிபட்ட ஷாட்டையும் அதன்பின்னர் அடித்து வெற்றி பெறலாம் எனக்கூறியுள்ளார். அவர் கூறியபடியே அதிரடியுடன் ஆட்டத்தை முடித்தார் அஸ்வின்.

இனி வாய்ப்பு கிடையாது
36 வயதாகும் அஸ்வினை இனி இந்தியாவின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிதும் சேர்க்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வினுடன் சேர்த்து மொத்தம் 6 சீனியர் வீரர்களுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் அவர் இலங்கையுடனான டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என இரண்டிலுமே வாய்ப்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications