
பிப்ரவரி 11ல் ஏலம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் -மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில் வரும் மாதம் 11ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறிய அளவில் இந்த ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்சிபி வீரர் 100 கோடி ரூபாய் க்ளப்
ஆர்சிபி அணி அந்த அணியின் நட்சத்திர வீரரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபி டீ வில்லியர்சை இந்த ஆண்டும் தக்க வைக்க உள்ளது. அவருக்கான சம்பளம் 11 கோடி ரூபாய். இந்நிலையில் அவர் இந்த சம்பளத்தின் மூலம் ஐபிஎல்லின் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையவுள்ளார்.

ஐபிஎல் சம்பளம் ரூ.91.5 கோடி
அவர் கடந்த 2008 ஐபிஎல் தொடர் துவங்கியதில் இருந்து ஆடிவருகிறார். கடந்த 2011 முதல் ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஆண்டு அவரது ஐபிஎல் சம்பளமும் 11 கோடி. இதுவரை ஐபிஎல்லில் அவரது சம்பளம் 91.5 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் வரும் 2021 தொடருக்கான 11 கோடி ரூபாய் சேர்ந்தால் அவரது சம்பளம் 102.5 கோடி ரூபாயாகும்.

100 கோடி ரூபாய் க்ளப்
முன்னதாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஆகியோர் மட்டுமே ஐபிஎல்லின் 100 கோடி ரூபாய் க்ளப்பில் உள்ளனர். இந்நிலையில இந்த க்ளப்பில் இணையவுள்ள முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை டீ வில்லியர்ஸ் தட்டி செல்லவுள்ளார்.


Click it and Unblock the Notifications