இந்திய அணி
இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் தான் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, முழு உடற்தகுதியுடன் கம்பேக் கொடுத்துள்ளார். அணித்தேர்வுகாக மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் அவர் தனக்கு தேவையான வீரர்களை கேட்டு வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ரோகித்தின் முடிவு
இந்நிலையில் அந்த பட்டியலில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வேண்டாம் எனக்கூறியிருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பும்ராவின் செயல்பாடுகள் தான். அந்த அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்கள் மற்றும் ரன்களை கட்டுப்படுத்துவது என இரண்டிலுமே சற்று மோசமாக இருந்தார்.
என்ன காரணம்
பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதில் பும்ரா கில்லாடி, ஆனால் அவரால் அங்கு எதுவுமே செய்ய முடியவில்லை. பும்ராவை பற்றி நன்கு அறிந்த ரோகித் சர்மா ,இதே மனநிலையுடன் அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவைக்க விரும்பவில்லை. பும்ராவுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு கொடுத்துவிட்டு, இலங்கை தொடர் முதல் மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளதாக தெரிகிறது.
Recommended Video
மாற்று வீரர்கள் யார்
இதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற போவதில்லை எனத்தெரிகிறது. இவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் பிரஷித் கிருஷ்ணா, ராகுல் சஹார் போன்றோரை பயன்படுத்த ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.