இறுதிச்சுற்று
இதனையடுத்து களமிறங்கிய டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற, மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மட்டும் வழக்கம் போல தூணாக நின்றார். நிதானமாக விளையாடி வந்த அவர், 96 பந்துகளை சந்தித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரன்ரேட் குறைவாக உள்ளது என ரசிகர்கள் நினைத்த அந்த தருணத்தில் தான் டாப் கியருக்கு சென்றார் ருதுராஜ் கெயிக்வாட்.
அட்டகாச சதம்
முதல் 61 பந்துகளை சந்தித்து வெறும் 19 ரன்களை மட்டுமே அடித்திருந்த அவர், 125 பந்துகளில் 102 ரன்களை விளாசினார். அதாவது அடுத்த 64 பந்துகளில் 83 ரன்களை ஒரே அடியாக விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அவர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். அதுவும் கடைசி 5 இன்னிங்ஸ்களில் 4வது சதம் இது என்றால் நம்ப முடிகிறதா?? இதில் 3 நாக் அவுட் போட்டிகளில் ஆகும்.
இரட்டை சதம் விளாசல்
காலிறுதிப்போட்டியில் உத்தரபிரதேசத்திற்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் கெயிக்வாட் 159 பந்துகளில் 220 ரன்கள் என இரட்டை சதத்தை விளாசியிருந்தார். இதில் தான் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் என விளாசி சாதனை படைத்திருந்தார். இதன்பின்னர் அரையிறுதிப்போட்டியில் அசாம் அணிக்கு எதிராக 126 பந்துகளில் 168 ரன்களை அடித்து அசத்தினார். இப்படி இருக்கையில் தான் தற்போது இறுதிப்போட்டியிலும் சதம் பறந்துள்ளது.
எனினும் ஒரு குறை
சௌராஷ்டிராவுக்கு எதிராக வெற்றிகரமாக சதத்தை பூர்த்தி செய்த போதும், அவரால் இன்னிங்ஸை முடித்துக்கொடுக்க முடியவில்லை. 131 பந்துகளில் 108 ரன்கள் அடித்திருந்த போது ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். சிஎஸ்கேவின் எதிர்காலமாக பார்க்கப்படும் ருதுராஜ் கெயிக்வாட், இப்படி ஆடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.