
போட்டியில் விளையாடவில்லை
4வது ஒருநாள் போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்பட்டு இருந்தார்கள். இம்ரான் ஓய்வில் இருக்கும் வீரர்கள் போலவே வாட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் கொடுக்கும் வேலை பார்த்தார்.

பிரச்சனை
இவர் இந்த வேலையைப் பார்க்கும் போது அங்கு இருந்த நபரால் திட்டப்பட்டுள்ளார். அவரை அந்த ரசிகர் மத ரீதியாக திட்டி இருக்கிறார். உடனே இம்ரானும் சண்டைக்குச் சென்று உள்ளார்.

அழைத்துச் சென்றார்கள்
இவர்களின் வாக்குவாதம் பெரிதானது. அதற்குள் அங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தார்கள். பின் அவரை உடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார்கள் .

விசாரணை செய்யப்படும்
இது குறித்து விசாரணை வேண்டும் என்று இம்ரான் கேட்டு இருக்கிறார். அந்த ரசிகர் இந்தியர் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்த ஒப்புக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
