வதோதரா: அனுபவம் பேசும் என்பது விளையாட்டு உலகில் பலமுறை நிரூபிககப்பட்டுள்ளது. அதில் லேட்டஸ்ட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடிய போட்டியை கூறலாம்.
தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-1 என வென்றது. இதன் மூலம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையைப் படைத்தது.