கட்டுநாயகே: ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்ற நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களை எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 51 ரன்களை எடுத்தார். கேப்டன் மிதாலி ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களை எடுத்தார்.