முதல் இரண்டில் போட்டிகளில் இல்லை
முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அதில் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. வேகப் பந்துவீச்சுக்கு உமேஷ் யாதவ், கலீல் அஹ்மது மற்றும் முகம்மது ஷமி அணியில் இருந்தனர்.
ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ்
இந்திய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 320 ரன்களுக்கும் மேல் குவித்தது. இந்திய அணியில் இருந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்திய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 320 ரன்களுக்கும் மேல் குவித்தது. இந்திய அணியில் இருந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
எங்க ஆட்டம் தான் காரணம்
கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்த போது அதில் பும்ரா, புவனேஸ்வர் இணைக்கப்பட்டதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான செயல்பாடுகள் தான் காரணம் என கூறி பெருமை பட்டுக் கொண்டுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா. எனினும், இந்தியா ஏற்கனவே கடைசி மூன்று போட்டிகளில் பும்ரா, புவனேஸ்வர் குமாரை அணியில் சேர்க்க திட்டம் வைத்து இருந்தது என கூறப்படுகிறது.
அதிரடி பேட்ஸ்மேன்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ரன் குவித்தார். ஷாய் ஹோப் இரண்டாவது போட்டியில் கடைசி வரை நின்று ஆடி போட்டியை டை செய்தார்.