ஐபிஎல் அளவுக்கு வளரவில்லை
இந்த தொடர் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை நடக்க உள்ளது. வெறும் 10 ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டிகள் என்பதால் போட்டிகள் விரைவில் முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம். எனினும், ஐபிஎல் போல பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு இந்த தொடர் வளரவில்லை. இப்போது தான் இந்த தொடர் பற்றிய அறிமுகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடக்கும் டி10 லீக்
முதல் சீசன் கடந்த டிசம்பர் 2017இல் நடைபெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு இந்த 10 ஓவர்கள் தொடரை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த தொடரின் அங்கீகாரம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பாகிஸ்தான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.
அணிக்கு 8 வெளிநாட்டு வீரர்கள்
இந்த இரண்டாவது சீசனில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் சீசனில் ஆறு அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முறை புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளன. ஒவ்வொரு அணியிலும் எட்டு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் 64 வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.
எட்டு அணிகள் பட்டியல்
டி10 தொடரில் ஆட உள்ள எட்டு அணிகள் இது தான். மாரத்தா அரேபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா கிங்ஸ், தி கராச்சியன்ஸ், பஞ்சாப் லெஜண்ட்ஸ், பாக்த்துன்ஸ், கொழும்பு லைன்ஸ், ராஜ்புட்ஸ் மற்றும் நார்தர்ன் வாரியர்ஸ். இதில் தி கராச்சியன்ஸ் மற்றும் நார்தர்ன் வாரியர்ஸ் இரண்டும் இந்த ஆண்டில் இருந்து இணைய உள்ள புதிய அணிகள்.