தொடக்கமே ஷாக்
தொடக்கத்தில் 2 பவுண்டரிகளை அடித்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, முசர்பானியின் முதல் ஓவரிலேயே சிக்கினார். பவுன்சர் பந்துகளை புல் ஷார்ட்டாக ஆடுவதில் ரோகித் சர்மா கில்லாடியாக இருப்பார். ஆனால் இன்று அதே ஷாட்டால் அவுட்டானார். இதன்பிறகு வந்த விராட் கோலி வழக்கம் போலவே தனது க்ளாசான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கோலியின் விக்கெட்
நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 25 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். ஆனால் அதற்கு மேலும் அவரின் இன்னிங்ஸ் தொடரவில்லை. சீன் வில்லியம்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கோலியின் அரைசதத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோலியின் பலமான ஷாட்
இந்நிலையில் கோலி அவுட்டான விதம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. பாகிஸ்தான் போட்டியில் ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார்ட் பந்தை நம்பவே முடியாத வகையில் கோலி நேராக சிக்ஸருக்கு விளாசியது அனைவருக்கும் தெரியும். இதன்பின்னர் கோலி ஷார்ட்டாக வரும் பந்துகளை நன்றாகவே ஆடி வருகிறார். ஆனால் இன்று அதே பந்தில் சிறிய மாற்றம் செய்து கோலிக்கு ஸ்கெட்ச் வைத்திருந்தார் வில்லியம்ஸ்.
அப்படி என்ன மாற்றம்
சற்று ஷார்ட் லெந்த்தாக வீச முடிவெடுத்த வில்லியம்ஸ், அதனை சற்று நகர்த்தி அவுட்சைட் ஆஃப் திசையில் போட்டார். இதனையும் சரியாக கணித்த விராட் கோலி லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். ஆனால் அவுட்சைட் ஆஃப் என்பதை சரியாக கணித்த கோலி, பந்தின் பவுன்சை கணிக்க மறந்துவிட்டார். கோலி வழக்கமாக ஆடுவதை விட இன்னும் சற்று கூடுதல் பவுன்ஸாக போடப்பட்டது.
டாப் எட்ஜ் அவுட்
இதனால் பேட்டின் டாப்பில் பட்ட பந்து, எந்தவித தூரமும் கிடைக்காமல் உயரமாக மட்டுமே சென்று கேட்ச்சாக மாறியது. விராட் கோலியின் கரியரில் மறக்க முடியாத ஷாட்டான அதை பயன்படுத்தியே இன்று வில்லியம்ஸ் விக்கெட் எடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.