ஆஸி.236 ரன்கள்
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகம்மது சமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
240 ரன்கள் எடுத்து வெற்றி
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1க்கு 0 என முன்னிலை வகிக்கிறது.
2வது ஒருநாள் போட்டி
இந் நிலையில், நாளை இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நாக்பூர் விதார்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று நாக்பூர் சென்றிருக்கிறது.
|
9 ஆட்டங்களில் வெற்றி
நாக்பூரில் இந்தியா 17 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு இந்தியா விளையாடியது. நாக்பூரில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. ஒன்று விதார்பா கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
முக்கியமான தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மே 30 முதல் இங்கிலாந்தில் உலககோப்பை தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடரின் இதுவாகும்.
இந்தியாவுக்கு சோதனை
எனவே இந்த தொடரில் இந்திய அணியின் திறமை மற்றும் பலம், பலவீனம் அறிய வாய்ப்பாக இந்த தொடர் அமையும். இன்னும் சொல்ல போனால், ஒரு கட்டத்தில், இந்த தொடர் இந்தியாவுக்கு உலககோப்பைக்கு முன் ஒரு சோதனை ஆகும்.