அந்த திக் சம்பவம் மட்டும் நடக்க கூடாது.. புஜாரா சொன்ன அந்த வார்த்தை.. தீவிரமாக பிளான் போடும் இந்தியா
சென்னை: பிங்க் பால் போட்டிக்கு இந்திய அணி கண்டிப்பாக நன்றாக ஆடும் என்று இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது.

புஜாரா
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து புஜாரா அளித்த பேட்டியில், பிங்க் பால் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. தீவிரமாக பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு அவுட் ஆனது போல ஆக வாய்ப்பு இல்லை.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் நடந்தது வித்தியாசமான சூழ்நிலை. பந்து அந்த போட்டியில் மிகவும் வேகமாக வந்தது. இது இந்திய அணிக்கு பெரிய அளவில் எதிராக திரும்பியது. நாங்கள் ஒரு போட்டியில்தான் சரியாக ஆடவில்லை.

ஆடினோம்
அதன்பின் அனைத்து போட்டியிலும் நாங்கள் நன்றாக ஆடினோம். அந்த பழைய திக் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் தற்போது அதிக அளவு பிரபலமான பிட்சில் ஆட இருக்கிறோம்.

நம்பிக்கை
நாங்கள் தற்போது மிகவும் நம்பிக்கையாக இருக்கிறோம். பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். பிங்க் பாலில் அதிகம் ஆடிய அனுபவம் இல்லை. ஆனாலும் நாங்கள் பிங்க் பால் போட்டிகளில் நன்றாக ஆடுவோம் என்று புஜாரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications