
டெஸ்ட் போட்டி
இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இந்திய ஏ அணி வங்கதேசத்துக்கு சென்று 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் நாளான இன்று சௌரப் குமார் மற்றும் நவ்தீப் சிங்கின் அபார பவுலிங்கால் வங்கதேச அணி 112 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பே 120 ரன்கள் அடித்து 8 ரன்கள் முன்னிலை பெற்றது.

சர்ச்சை முடிவு
இந்நிலையில் இந்த போட்டியில் வங்கதேசத்திற்கு அநீதி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய இன்னிங்ஸின் 9வது ஓவரின் போது கலலெத் அகமது வீசிய பந்தை ஓப்பனிங் பேட்டர் அபினன்யூ ஈஸ்வரன் மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு, வேகமாக சிங்கிள் அடிக்க ஓடினார். அப்போது அங்கிருந்த ஃபீல்டர் நான் ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ஸ்டம்பிற்கு சரியாக த்ரோ அடித்தார்.

அம்பயர் முடிவு
இதனையடுத்து வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் அவுட் என அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர்கள் அவுட் கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். ஈஸ்வரன் வேகமாக கிரீஸுக்குள் சென்றுவிட்டதாக கூறினார். கடைசியில் பார்த்தால் வங்கதேச அணி கூறியது தான் உண்மை. உண்மையில் ஈஸ்வரன் வருவதற்குள் ஸ்டம்ப் அவு செய்யப்பட்டுவிட்டது.

ரசிகர்கள் ஆத்திரம்
அப்போது மட்டும் அம்பயர்கள் அவுட் கொடுத்திருந்தால் இந்திய அணி 29 ரன்களுக்கெல்லாம் முதல் விக்கெட்டை இழந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதால், 120 ரன்கள் வரை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. இதனால் அம்பயர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications