அபுதாபியில் முதல் போட்டி
ஐபிஎல் போட்டிகள் நாளை அபுதாபியில் துவங்கவுள்ளது. துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் களமிறங்கி ஆடவுள்ளனர். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அணியின் அனைத்து தளங்களும் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறப்பான வலிமை
அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், விக்கெட்டுகள் மிகவும் மெதுவாகவே விழும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அணியின் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் அமித், மற்றும் அக்ஸர் ஆகியோர் சிறப்பாக உதவ முடியும் என்று அவர் கூறியுள்ளார். அவர்களின் அனுபவம் அணிக்கு சிறப்பான வலிமையை அளிக்கும் என்றும் கூறினார்.
ஆலோசனை பெற ஸ்ரேயாஸ் தயாராக வேண்டும்
அதிகமான அனுபத்துடன் இந்த சீசனில் டெல்லி கேபிடல்சில் இணைந்துள்ள அஸ்வின் அணிக்கு மட்டுமின்றி கேப்டனுக்கும் சிறப்பாக உதவ முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனியர்கள் மற்றும் ஜூனியர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக இருந்தால் அவர் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் ஷிகர் கூறினார்.
சிறப்பாக கைகொடுக்கும்
தங்களது அணியின் பேட்டிங், பௌலிங் உள்ளிட்ட அனைத்து தளங்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் யூஏஇயின் பிட்ச்களில் விளையாட இது சிறப்பாக கைகொடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 2014ல் பாதி போட்டிகள் யூஏஇயில் நடைபெற்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட ரன்கள் இருமுறை மட்டுமே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.