ரோஹித் சர்மா சொல்வது என்ன?
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "எல்லா அணிகளின் மனதிலும் உலகக்கோப்பை தான் இருக்கிறது. ஆசிய கோப்பை அதற்கான சரியான முன்னோட்டமாக இருக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆஞ்சலோ மாத்யூஸ், சர்ப்ராஸ், மஷ்ராபே எல்லாம் என்ன திட்டம் செய்கிறார்கள், அவர்களின் பலம், பலவீனம் எல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த தொடர் நடக்கும் போது அதை எல்லாம் புரிந்து கொள்ள முடியும். உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. அதற்கான திட்டத்தை இங்கே முயற்சி செய்து பார்க்கலாம்" என கூறினார்.
பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்
"பாகிஸ்தான் உலகக்கோப்பை வரை பல தொடர்களில் ஆட உள்ளது. நாங்கள் இப்போதைக்கு ஆசிய கோப்பையில் கவனம் செலுத்துவோம். அடுத்து ஒவ்வொரு தொடராக அணுகி, உலககோப்பைக்கு செல்வோம். எங்கள் அணி எங்கே நிற்கிறது என எங்களுக்கு ஒரு யோசனை இருக்கிறது" என மிகவும் நம்பிக்கையோடு நேர்மறையாக பேசினார் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ். இந்தியா, இந்த பாகிஸ்தான் கேப்டனிடம் கவனமாக இருக்க வேண்டும். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவிடம் இருந்து தட்டிச் சென்றது.
மற்ற கேப்டன்கள் சொல்வது என்ன?
ஆஞ்சலோ கூறும்போது நிதாஸ் தொடரில் வங்கதேசத்துக்கும், இலங்கைக்கும் சில சர்ச்சைகள் எழுந்தது பற்றி குறிப்பிட்டார். " பழையதை மறந்துவிடுவோம். இங்கே நல்ல கிரிக்கெட் ஆடுவதில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும். ஒரு போட்டியில் தோற்றாலும், வெளியே சென்று விடுவோம்" என கூறினார். ஆப்கன் மற்றும் ஹாங்காங் கேப்டன்கள் மற்ற அணிகளை அச்சுறுத்த முயல்வோம் என கூறினர்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் மோதல் பற்றி ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அவர், "பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவது உற்சாகமாக இருக்கும். ஆனால், அது ஒரு போட்டி மட்டுமே. இங்கே நாங்கள் தொடர் முழுவதும் ஆடுவதில் கவனம் செலுத்துவோம்" என கூறினார். இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.