கத்தார் அணியின் செயல்பாடுகள்
அதேபோல் உலகக்கோப்பையை நடத்தும் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது இல்லை என்ற வரலாறு இருப்பதால், கத்தார் அணி வெற்றிபெறும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளுக்கு ஈகுவடார் அணி ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தது. தொடக்கம் முதலே டிஃபென்சிவ் மனநிலையில் ஆடிய கத்தார் அணியதால், ஆக்ரோஷமான மனநிலையில் ஆடிய ஈகுவடார் அணிக்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை.
பாஸ் கூட செய்ய முடியாத கத்தார்
அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தில் பந்தை பாஸ் கூட சரியாக செய்ய முடியாமல் கத்தார் களத்தில் திணறியது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிப்பதற்கான முயற்சியை கூட கத்தார் அணி செய்யவில்லை. அதேபோல் ஈகுவடார் அணி வீரர்களிடம் இருந்து பந்தை கைப்பற்ற பெரும் போராட்டத்தையே கத்தார் அணி வீரர்கள் செய்ய வேண்டியிருந்தது. அப்படியே பந்தை கைப்பற்றினாலும், பூமராங் போல் மீண்டும் ஈகுவடார் அணி வீரர்களின் கால்களுக்கு பந்து சென்றது.
மோசமான சாதனை
அதேபோல் டிஃபெண்ட் செய்ய தெரியாமல், ஈகுவடார் அணிக்கு அதிகமாக ஃபீரி கிக் வாய்ப்பை கத்தார் அணி விட்டுக்கொடுத்தது. இதனை பார்த்த ரசிகர்கள் கட்டிடம், ஹோட்டம், மைதானம் என்று கட்டமைத்த கத்தார் நாடு, சிறந்த கால்பந்து அணியை கட்டமைக்கவில்லை என்று சிந்திக்க தொடங்கினர் என்றே கூறலாம். இறுதியாக 2-0 என்ற ஈகுவடார் அணியிடம் கத்தார் அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் 92 ஆண்டுகளில் யாராலும் படைக்க முடியாத சாதனையை கத்தார் படைத்துள்ளது.
அடுத்த போட்டிகள்
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் உலகக்கோப்பைத் தொடரை நடத்திய நாடு, முதல் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். சுமாராக ஆடும் ஈகுவடார் அணியிடமே மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளதால், அடுத்து வரும் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகளோடு விளையாட வேண்டிய நிலை உள்ளது. அதிலாவது ஒரு கோலை கத்தார் அணி அடிக்குமா என்ற அந்த நாட்டின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.