டெல்லி: கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தற்போது நடந்து வரும் ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ-லீக் போட்டிகள் முடிந்த பிறகு, மார்ச் மாதம் சூப்பர் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது.
கால்பந்து போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், இரண்டு விதமான லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளும், அதே நேரத்தில் ஐ-லீக் போட்டிகளும் நடந்து வருகின்றன.