தீபிகா அபாரம்!
இந்திய அணியினர் 10 புள்ளிகளை 5 முறை எடுத்தனர். இதில் 3 முறை 10 புள்ளிகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்தீபிகா குமாரி.
ஆடவர் அணி
தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர், அடனு தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மெக்ஸிகோவிடம் இறுதிச் சுற்றில் 3-5 என தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கலப்பு இரட்டையர்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, புவஷா ஷிண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தீபிகாவுக்கு 3 பதக்கங்கள்
முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். அதோடு தனிநபர் பிரிவிலும், ஜெயந்தா தலுக்தருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இதனால், அவருக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன.
ஆசிய போட்டியிலும்..
பதக்கங்களை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, இந்த போட்டி அதிக கடினமாக இருக்கவில்லை. ஆசிய போட்டிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.