
தீபிகா அபாரம்!
இந்திய அணியினர் 10 புள்ளிகளை 5 முறை எடுத்தனர். இதில் 3 முறை 10 புள்ளிகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்தீபிகா குமாரி.

ஆடவர் அணி
தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர், அடனு தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மெக்ஸிகோவிடம் இறுதிச் சுற்றில் 3-5 என தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, புவஷா ஷிண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தீபிகாவுக்கு 3 பதக்கங்கள்
முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். அதோடு தனிநபர் பிரிவிலும், ஜெயந்தா தலுக்தருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இதனால், அவருக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன.

ஆசிய போட்டியிலும்..
பதக்கங்களை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, இந்த போட்டி அதிக கடினமாக இருக்கவில்லை. ஆசிய போட்டிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications