காலிறுதிப்போட்டி
இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் போட்டி இன்று நடைபெற்றது. மகளிருக்கான பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மலேசிய வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கமே எதிரணி வீராங்கனையின் கை தான் ஓங்கியிருந்தது.
சரிவை சந்தித்த சிந்து
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற முதல் சுற்றில் இரு வீராங்கனைகளுமே மாற்றி மாற்றி புள்ளியை பெற்று வந்தனர். எனினும் கடைசியில் மலேசிய வீராங்கனையே வெற்றி பெற்றார். முதல் சுற்றில் 21 - 19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இதனால் 2வது சுற்றில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிந்து தள்ளப்பட்டார்.
அட்டகாசமான கம்பேக்
அதற்கேற்றார் போலவே 2வது சுற்றில் பி.வி.சிந்து தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. தொடக்கத்தில் 3 - 1 என முன்னிலை வகித்த சிந்து, 5 - 6, 9 - 7, 11 - 8 என தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்று வெற்றிக்கு அருகில் சென்றார். இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 21 - 14 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். மேலும் 1 - 1 என போட்டி சமநிலை அடைந்தது.
பரபரப்பு கட்டம்
போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி சுற்றும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு சென்றது. 6 - 6, 8 - 8 என தொடர்ச்சியாக மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். எனினும் விடாமல் போராடிய பி.வி.சிந்து 21 - 18 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். மேலும் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறினார்.