ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் தடை தாண்டும் போட்டியின் 3000மீ பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இந்திய வீராங்கனை லலிதா பாபர் 10வது இடத்துடன் வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக் தொடரின் மகளிருக்கான தடை தாண்டும் போட்டியில் 3000 மீட்டர் பிரிவில் இந்தியா சார்பாக பங்கேற்ற லலிதா பாபர் சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
பதக்கம் வெல்லும் நம்பிக்கையை அளித்த அவர் திங்கட்கிழமை நடைபெற்ற இறதிச்சுற்றுப் போட்டியில் 10வது இடம் பிடித்து தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவர் பந்தைய தூரத்தை 9:22:74 வினாடிகளில் கடந்தார்.
லலிதா பாபர் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய ஒலிம்பிக் ரசிகர்களுக்கு மற்றொரு ஏமாற்றமாக அமைந்துள்ளது.