ஷிகர் தவான் சொதப்பல்
ஆனால் இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டனாக பல்வேறு தொடர்களில் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப் போனால், கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ஷிகர் தவானே செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பிய பின், தொடக்க வீரராக விளையாடினார்.
தவான் எதிர்காலம்?
ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் ஷிகர் தவானின் ஃபார்ம் மோசமாக இருந்தது. மொத்தமாகவே 25 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் பலரும் கில் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
அஞ்சும் சோப்ரா கருத்து
சில மாதங்களுக்கு முன் ஷிகர் தவான் கூறுகையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என்று தெரியாது. தற்போது எனது மொத்த கவனமும், இலக்கும் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடர் மட்டும் தான் என்று கூறி இருந்தார். இந்த கருத்து குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான அஞ்சும் சோப்ரா கூறுகையில், ஷிகர் தவான் தனது எண்ணத்தை தெளிவாக கூறியுள்ளார்.
அனுபவமும், இளமையும்
இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் ஷிகர் தவான் ஆட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும். அதேபோல் இந்திய அணியை அனுபவம் மற்றும் இளமையோடு கட்டமைக்க வேண்டும். அதனால் உலகக்கோப்பைத் தொடரில் ஷிகர் தவான் தேவை உள்ளது என்று தெரிவித்தார்.