
டெஸ்ட் தொடர்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனினும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும்.

குழப்பம்
இதனிடையே இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிசிசிஐ-க்கு பும்ரா கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விலக முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

திருமணம்
இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அந்த பெரும் நாளுக்காக தயாராகவே பும்ரா விடுமுறை கேட்டதாகவும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் ஒத்துழைத்ததால், 4வது போட்டியில் பும்ராவின் தேவை அவ்வளவாக இருக்காது.

மணப்பெண்
கடந்த ஆண்டு பும்ராவும், ப்ரேமம் திரைப்பட புகழ் அனுபாமா பரமேஸ்வரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு இருவர் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா விடுப்பு கேட்டுள்ள நிலையில், நடிகை அனுபாமா பரமேஸ்வரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Happy holiday to me' என பதிவிட்டுள்ளார். இதனால் அனுபாமா தான் மணப்பெண் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications