ஸ்டிபன் பிளெமிங்
நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டிபன் பிளெமிங் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார். சிஎஸ்கேவிடம் நிறைய பணம் மீதம் இருப்பதால் ஐபிஎல் போட்டியின் இடையில் ஏதாவது வெளிநாட்டு வீரர் புதிய விதியின் படி மற்ற அணியில் இருந்து சென்னை அணிக்கு எடுக்கப்படலாம்.
கூட்டு
சென்னை அணிக்கு பேட்டிங் ஆர்டரை விட பவுலிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. லுங்கி சனி கிடி, மார்க் உட், வாட்சன், ஷரத்துள் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோர் வேகப்பந்து வீச்சிற்கு உதவியாக இருப்பார்கள். ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் கை கொடுப்பார்கள். அதேபோல் பார்ட் டைம் பவுலர்களும் அதிகம் உதவுவார்கள்.
டோணி எங்கு இறங்குவார்
இந்த அணியில் இப்போதெல்லாம் டோணி 5 விக்கெட் விழுந்த பின்தான் இறங்குகிறார். சமயங்களில் 7 வது பேட்ஸ்மேனாக கூட இறங்குகிறார். ஆனால் சென்னை அணிக்காக அவர் 4வது பேட்ஸ்மேனாக இறங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 3 வது பேட்ஸ்மேனாக எப்போதும் போல ரெய்னா களம் இறங்குவார்.
பேட்டிங் ஆர்டர்
அதேபோல் டோணிக்கு அடுத்து கேதார் ஜாதவ், அம்பதி ராயுவு களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்து ஜடேஜா களமிறங்குவார். அதற்கு அடுத்தபடியாக பிராவோ களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் 8 விக்கெட் விழும் வரை சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.