பிளே-ஆப் சுற்று
கடந்த செப்டம்பர் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் 2020 தொடர் துவங்கி தற்போது பிளே-ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நேற்றைய தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.
முன்னாள் வீரர் சச்சின் விளக்கம்
கடந்த 6 வாரங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவரும் சூழலில் அதிகப்படியான வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் போட்டிகளை எதிர்கொள்ள அனைத்து அணிகளும் திணறின. இந்நிலையில் தற்போது அங்கு வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சின் வீடியோ வெளியீடு
வெப்பநிலை சராசரியாக 6 டிகிரிகள் குறைந்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். துபாய் மற்றும் அபுதாபியில் சேஸிங் செய்யும் அணிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பௌலர்கள் சிறப்பான பௌலிங்
சூரியன் சீக்கிரத்தில் மறைவது உள்ளிட்ட காரணங்களால் பிட்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம் பௌலர்கள் சிறப்பான பிட்ச்சை கொண்டு பௌலிங் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குளிர்ச்சியான சூழலும் பௌலர்களுக்கு சிறப்பாக உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.