அதையும் கவனியங்கள்
இந்த விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள கவுதம் கம்பீர், ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர் தான் தேவை என்று தெரிவித்துள்ளார். உம்ரான் மாலிக் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் அதிக ரன்களை கொடுப்பதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். ஆனால் அவர் விக்கெட்டையும் அதிகமாக எடுக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த பயனும் இல்லை
விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை மட்டும் கட்டுப்படுத்தி எந்த பயனும் இல்லை. நாம் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். முதல் 30 ஓவர்களில் விக்கெட்டுகள் விழாமல் அடுத்த 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 360 ரன்களை எல்லாம் அணிகள் எட்டுகின்றன. அப்போது முதல் 30 ஓவர்களில் ரன்ளை கட்டுப்படுத்தி என்ன பயன் இருக்கிறது. இதனால் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே எடுக்கக்கூடிய வீரர்கள் உங்களுக்கு தேவை. அந்த பணியை தான் உம்ரான் மாலிக் செய்து வருகிறார்.
தொடர்ந்து பயன்படுத்துங்கள்
தற்போது வெறும் ஏழு போட்டிகளில் தான் அவர் விளையாடி இருக்கிறார்.இளம் வீரராக உம்ரன் மாலிக் இருக்கிறார். தனக்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து அவர் மேன்மேலும் வளர தான் செய்வாரே தவிர ,அவர் மோசமாக செயல்பட வாய்ப்பு இருக்காது .இதன் காரணமாக உம்ரன் மாலிக்கை தொடர்ந்து அணி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும். இதேபோன்று முகமது சிராஜும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரராக இருக்கிறார். சில சமயங்களில் அவர் ஓவர்களில் ரன் போகலாம்.
கம்பீர் அறிவுரை
என்னை கேட்டால் தற்போது இருக்கிற பந்துவீச்சாளர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் 350 ரன்களை கூட விட்டுக் கொடுக்கலாம். பேட்ஸ்மேனாகிய நீங்கள் அந்த ஆட்டத்தில் விளையாட வேண்டும். மற்ற போட்டிகளில் எல்லாம் இந்த பந்துவீச்சு படை அதிக அளவில் விக்கெட்டுகளை எடுக்கிறது. இது உண்மையிலேயே இந்திய அணிக்கு நல்ல விஷயமாகும். என்னை பொறுத்தவரை உம்ரான் மாலிக் இந்த விமர்சனங்களை எல்லாம் கேட்காமல் தொடர்ந்து அவருடைய பந்துவீச்சில் கவனம் செலுத்தி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.