
அருமையான வாய்ப்பு
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது : இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அற்புத வாய்ப்பு.

போட்டி அதிகரிப்பு
ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால் இந்தத் தொடரில் எனக்கான போட்டி அதிகரித்துள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இந்த தொடர் மிகவும் கடினமானது.

தக்க வைப்பது அவசியம்
இந்த தொடரில் சாஹல், குல்தீப், ஜடேஜா, கருணால் பாண்டியா மற்றும் ராகுல் சாகர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் எனது இடத்தை நான் தக்கவைத்துக்கொள்வது ரொம்ப அவசியம்.

விடா முயற்சி, சோதனை
அதற்காக ஒவ்வொரு நாளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது கடின உழைப்புக்கும் என்னுடைய விடாமுயற்சிக்கும் இந்த தொடர் ஒரு சோதனை அமையவுள்ளது. 2 ஆண்டுகளாகியும் எனக்கு வாய்ப்பு அவ்வப்போது கிடைப்பதால் இந்த தொடரில் என்னை நிரூபிக்க உள்ளேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications