பவுலிங் தேர்வு
இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒற்றுமை என்றால் அது டாஸ் வெற்றி பெறுவதுதான். முதல் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது தொடங்கி நேற்று ஹைதராபாத் டாஸ் வென்றது வரை, எல்லா அணிகளும் முதலில் பந்து வீசவே முடிவு செய்து இருக்கிறது. எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணி சேசிங்கையே தேர்வு செய்கிறது.
வெற்றி பெறுகிறார்கள்
அதேபோல் இதில் மிக முக்கியமான ஒற்றுமை இருக்கிறது. எந்த அணி ஐபிஎல் போட்டியில் டாஸ் வெல்கிறதோ அந்த அணியே போட்டியில் வெற்றி பெறுகிறது. டெல்லி ராஜஸ்தான் போட்டி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. பொதுவாக டி-20 போட்டியில் சேசிங் செய்யும் அணியே இதுவரை அதிக முறை வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல்லில் கடந்த 7 போட்டியிலும் இதுவே நடந்துள்ளது.
கடைசி நேரம்
இந்த ஐபிஎல் தொடரில் நடக்கும் மிக முக்கியமான விஷயம் என்றால், அது கடைசி நேர பதற்றம்தான். சென்னை அணி முதல் போட்டியை மிகவும் த்ரில்லாக வெற்றி பெற்றது. அப்போது தொடங்கி நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் 1 விக்கெட், 1 ரன், 1 பால் என்று ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது வரை எல்லா போட்டியும் மிகவும் த்ரில்லாக இருந்தது. கடைசி ஓவரில்தான் போட்டியே மாறுகிறது.
காயம் வெளியேற்றம்
இந்த ஐபிஎல் தொடரில் மோசமான விஷயம் என்றால் அது காயம்தான். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு முக்கியமான வீரர் காயத்திற்கு உள்ளாகிறார். முதல் போட்டியில் கேதார் ஜாதவ் காயமடைந்தார், பின்னர் பேட் கும்மின்ஸ், ரெய்னா, பாண்டியா, புவனேஷ்வர் குமார் என்று வரிசையாக ஐபிஎல் வீரர்கள் காயமடைந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் எல்லா போட்டியிலும் புதிய வீரர் இடம்பெறுகிறார்.