ரோஹித் துவக்கம்
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக 232 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா துவக்கம் அளித்து ஆடி வந்தார்.
அவுட்
ரோஹித் 12 ரன்கள் எடுத்து இருந்த போது, 4வது ஓவரில் ஹாரி கர்னி பந்தை தவறவிட்டார். அது காலில்பட்டது. அதற்கு எல்.பி.டபுள்யூ கேட்டது கொல்கத்தா அணி. அம்பயர் அவுட் கொடுத்தார்.
|
வாக்குவாதம்
அதை எதிர்த்து ரிவ்யூ கேட்டார் ரோஹித் சர்மா. ரிவ்யூவில் பந்து லெக் ஸ்டம்ப்பின் முனையை தகர்ப்பது தெரிந்தது. ஆனால், ரீப்ளே பார்த்த பின்னும் ஏற்றுக் கொள்ளாத ரோஹித் சர்மா, அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
பின்னர், கோபத்தில் அம்பயர் முன் இருந்த ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து தகர்த்தார். ரோஹித் சர்மா எப்போதும் அமைதியான குணம் கொண்டவராகவே பார்த்த ரசிகர்களுக்கு இந்த செயல் அதிர்ச்சியை அளித்தது.
அபராதம்
போட்டி முடிந்த பின் ரோஹித் சர்மாவிற்கு 15 சதவீதம் போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். ஏன் தெரியுமா?
கோலி சீண்டல்
கேப்டன் கோலியை ஆக்ரோஷமானவர், களத்தில் பொறுப்பில்லாமல் கோபத்தை காட்டுபவர் என ரோஹித் ரசிகர்கள் எப்போதும் கூறி, ரோஹித் சர்மாவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவார்கள்.
கோலி பற்றி..
ஆனால், இப்போது ரோஹித் சர்மா செய்த காரியத்தைப் பார்த்து, இனிமேல் ரோஹித் ரசிகர்கள், கோலி பற்றி பேசக் கூடாது என சமூக வலைதளத்தில் எனக் கூறி சீண்டி வருகிறார்கள். இது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.