மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் தொடரின் முதல் பாதி தொடரில் சிறிய வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. ஆனால் 2வது பகுதியில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து 4வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்ட்யா தான். இவரின் அசத்தலான பேட்டிங் தான் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை தேடிக் கொடுத்தது. ஆனால் இவரின் பந்துவீச்சு தான் ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.
ரசிகர்கள் கவலை
காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த இரண்டு வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால், பாண்ட்யா கடைசியாக பந்துவீசி 873 நாட்கள் ஆகின்றன. இந்தாண்டு முழுவதும் அவர் பந்துவீச மாட்டார் எனத் தெரிகிறது. மும்பை அணி ஹர்திக் போன்ற சிறப்பான சீனியர் வீரர் இருக்கும் போதும் வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.
பயிற்சியாளர் அறிவிப்பு
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி சரிவர இல்லை. அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் பந்துவீச மாட்டார். அவருக்கு பந்துவீச அழுத்தம் கொடுத்தால், அவரால் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தலைவலி
இது பிசிசிஐக்கு தான் தற்போது பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா மீது நம்பிக்கை வைத்து பிசிசிஐ சேர்த்துள்ளது. அவர் 7வது வீரராக அணிக்குள் விளையாடவுள்ளார். ஆனால் 7வதாக களமிறங்கும் வீரர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டால், அது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். எனவே அவரை உட்காரவைக்க வேண்டிய சூழல் தான் ஏற்படும்.
வலைப்பயிற்சி
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர். இது ஒரு துரதிஷ்டவசமானது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் தான் இந்தியாவின் கீ ப்ளேயர். முக்கியமான போட்டிகளில் அவரை பந்துவீச அழைக்கவிருந்தோம். ஆனால் உடற்தகுதி பிரச்னைகள் எழுந்துள்ளது. ஆனால் வலைப்பயிற்சிகள் மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என நம்புகிறேன்.