ஓப்பனிங்கே ஆப்பு
இதனையடுத்து சென்னை அணியின் ஓப்பனிங் ஜோடியாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினர். இரு வீரர்களுமே அதிரடி காட்டுபவர்கள் என்பதால், முதல் ஓவரில் இருந்தே பவுண்டரிகள் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்திற்கும் மொத்தமாக ஏமாற்றம் தந்தார் ருதுராஜ் கெயிக்வாட்.
உமேஷின் மந்திரம்
ஆட்டத்தின் முதல் பந்தையே நோ பாலாக போட்ட உமேஷ் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு சாதாரணமாக விளையாடி விடலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார். அதன்பின்னர் 2வது பந்தையும் வைட் திசையில் போட்டு தனது திட்டத்தை வெளிப்படையாகவே காண்பித்தார். எனினும் இதனை ருதுராஜ் உணரவில்லை.
வசமாக சிக்கிய ருதுராஜ்
3வது பந்தையும் வைடாக தான் போடுவார் என கணித்து ஒரு அடி முன் சென்று விளையாடினார். ஆனால் இங்கு தான் ட்விஸ்டே. முன்பு போட்டப்பட்ட பந்துகளை விட உமேஷ் யாதவ் சற்று பவுன்சரை அதிகமாக வைத்ததால் ருதுராஜின் பேட்டில் எட்ஜாகி ஸ்லிப் திசையில் கேட்ச் சென்றது. கொல்கத்தா விரித்த வலையில் வசமாக சிக்கினார்.
ஃபுட் வொர்க்கே இல்லை
ருதுராஜ் கெயிக்வாட் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் அவர் சந்தித்த அனைத்து பந்திகளிலுமே ஃபுட் வொர்க் சரியாக இல்லை. பந்தை எதிர்கொள்ள திணறினார். இன்னும் முழுமையாக அவர் தயாராகவில்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிஎஸ்கே நிர்வாகம் உண்மையை மறைக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.