காத்திருந்த ரசிகர்கள்
அந்த போட்டிக்கான டிக்கெட் வினியோகம் இன்று தொடங்கியது. அவற்றை ங்க விடிய, விடிய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பலர் வரிசையில் அமர்ந்த படியே உறங்கி போயினர்.
டிக்கெட் கட்டணங்கள்
போட்டிக்கு 1300 ரூபாய், 2500 ரூபாய் 5000 ரூபாய், 6500 ரூபாய் கட்டண வகைகள் உள்ளன. மொத்தம் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
டிக்கெட் வாங்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்றனர். அவற்றால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டதையடுத்து போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
லேசான தடியடி
மேலும், டிக்கெட்டை வாங்க அதிகமான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். கூட்டத்தில் இருந்தவர்களை ஒழுங்குப்படுத்தி விரைவாக டிக்கெட் வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர். காவிரி பிரச்சனை தொடர்பான போராட்டம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.