ரஞ்சி போட்டி
இந்த நிலையில், ஜடேஜா தனது உடல் தகுதியையும், ஃபார்மையும் நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த 24ஆம் தேதி ரஞ்சி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி தமிழக அணிக்காக களமிறங்கினார்.
உடல் தகுதி
இதில், சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய ஜடேஜா, முதலில் பந்துவீசினார். முதல் இன்னிங்சில் அவருடைய பந்தவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், 24 ஓவர்களை வீசி 48 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஜடேஜா தனது உடல் தகுதியை நிரூபித்தாலும், அவருடைய பழைய பந்துவீச்சு தென்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
ஜடேஜா பேட்டிங்
தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சௌராஷ்டிரா அணியில் பேட்டிங் செய்த ஜடேஜா, 3 பவுண்டரிகளை அடித்து 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜடேஜா 2வது இன்னிங்சில் பந்துவீசினார். ஆடுகளமும், சுழற்பந்துவீச்சுக்கு சாகமாக செயல்பட, ஜடேஜா, தனது பழைய பந்தவீச்சை வெளிப்படுத்தி விக்கெட் வேட்டையை நடத்தினார்.
7 விக்கெட்டுகள்
ஜடேஜா பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத தமிழக அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். 17 ஓவர்களை வீசிய ஜடேஜா, 53 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி 2வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடஜோ தற்போது பந்துவீச்சில் பார்ம்க்கு திரும்பிய நிலையில் பேட்டிங்கிலும் அடித்து ஆடினால் இனி கலக்கல் தான்.