பும்ராவின் விலகல்
இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக விமர்சனங்கள் இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணியிடம் 106 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். என்னதான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியது.
என்ன காரணம்
காயத்தில் இருந்து மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியிலும் விலகுவதாக அறிவிப்பு வெளியானது. அவருக்கு முதுகில் வலி பிரச்சினை இன்னும் இருப்பதாகவும்,பரிசோதனை நடந்து வருவதாகவும் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்தார்.
புதிய பிரச்சினை
இந்நிலையில் இது புது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா விவகாரத்தில் ஒரு தெளிவு இன்றி பிசிசிஐ உள்ளது. ஓய்வு தேவை என்ற சூழலில் இருக்கும் அவரை, அவசரப்படுத்தி அணிக்குள் சேர்க்கிறார்களா?? என்ற கேள்வி எழுகிறது.
9 நாட்கள் அவகாசம்
ஆஸ்திரேலிய தொடரிலும் இதே போல இக்கட்டான சூழலில் கொண்டு வரப்பட்டார். ஆனால் 4 ஓவர்களில் 50 ரன்களை அவர் வாரி வழங்கினார். இதனால் முழுமையாக உடற்தகுதி பெறாத ஒருத்தரை நம்பி டி20 உலகக்கோப்பை வரை செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாட்டை செய்ய அக்டோபர் 9ம் தேதியே கடைசி நாள் என்பதால் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.