
யார் இவர்
தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் கடந்த டிசம்பரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். திருநெல்வேலியை பூர்விகமாக கொண்டவர். இவர் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆவார். ரஞ்சியில் 27 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பவுலராகவும் இருக்கிறார்.

ஐபிஎல் அணி
விஜய் ஷங்கர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். மேலும் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மிகவும் திறமையான வீரரான இவர் 2015ல் இருந்த இந்திய 'எ' அணிக்காக விளையாடி வருகிறார்.

டெல்லி
தற்போது இவர் டெல்லி அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். டெல்லி அணி இவருக்கு 3.20 கோடி கொடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகையே 40 லட்சம்தான்.

திட்டம்
இவரை சென்னை அணி எடுக்கும் என்றுதான் முதலில் கூறப்பட்டது. ஆனால் இவரையும் சென்னை அணி எடுக்க தவறிவிட்டது. நாளை நடக்கும் ஏலத்தில் இன்னும் அதிக வீரர்களை சென்னை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications