அமைதி களைய வேண்டும்
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ஒரு புதிய பதிவில், அமைதியாக இருப்பதும் கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான். நான் அமைதியாக இருக்க விரும்பவில்லை. எனக்கு நடக்கவில்லை என்பதால் நான் அமைதியாக இருக்க முடியாது. நம்மைச் சுற்றிலும் நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம் மெளன சாட்சியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஜார்ஜ் கொலைக்கு நீதி தேவை
கடைகளை கருப்பர் இனத்தவர் சூறையாடுவதாக செய்திகள் படிக்கும் முன்பு, ஒரு நிராயுதபாணியான கருப்பர் ஒருவர் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பதை படியுங்கள். ஏன் அந்தக் கொலை என்று கேள்வி கேளுங்கள். அதற்கு நீதி வேண்டும் முதலில். ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி வேண்டும். ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நீதி தேவை.. இதுதான் நமது முதல் குரலாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நவோமி.
மைக்கேல் ஜோர்டான் கோபம்
ஏற்கனவே கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான், பார்முலா ஒன் சாம்பின் லூயிஸ் ஹாமில்டன் உள்ளிட்டோரும் ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நான் ஆத்திரமாக இருக்கிறேன் என்று மைக்கேல் ஜோர்டான் கோபமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஜார்ஜ் பிளாய்டு மரணத்தால் அமெரிக்காவே அதிர்ந்து போயிருக்கிறது.
பெரும் கலவரம்
விளையாட்டுத்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு துறையினரும் அமெரிக்க வெள்ளையர் போலீஸாரால் நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அங்கு கலவரங்களும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. போராட்டங்களை அடக்க முடியாமல் போலீஸார் தள்ளாடி வருகின்றனர்.