ஆட்டம்
முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் நிதிஷ் ரானா, சுப்மன் கில், சுனில் நரேன் ஆகியோர் வழக்கம் போல் பெரிய அளவில் ரன் அடிக்காமல் வெளியேறினர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ராகுல் திரிபாதி மட்டும் 36 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் மோர்கன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் பரிதாபமாக ரன் அவுட்டானார். கிறிஸ் மோரிஸ் சிறப்பான த்ரோவால் அவரின் விக்கெட்டை எடுத்தார்.
கிறிஸ் மோரிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் பயத்தை காட்டிய தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களின் ஆட்டத்தை ஒற்றை ஆளாக முடித்து வைத்தார் கிறிஸ் மோரிஸ். குறிப்பாக அவர் வீசிய 18வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிஅசத்தனார். இதனால் கொல்கத்தா அணியால் 133 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
மோரிஸ்
போட்டிக்கு பின்னர் பேசிய மோரிஸ், இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் அழிவதை பார்க்க முடிகிறது. கொரோனா பேரழிவு குறித்து எங்கள் கடந்த 2 நாட்களாக பேசி வருகிறோம். அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். பகலிரவு பார்க்காமல் உலகம் முழுவதும் முன்களப்பணியாளர்கள் செய்யும் பணி மிகப்பெரியது. அவர்கள் மிகப்பெரும் ஹீரோக்கள்.
பெரிய வாய்ப்பு
இந்த இக்கட்டான சூழலில் மக்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வரும் கடமை எங்களுக்கு உள்ளது. போட்டியில் வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் சரி. நாங்கள் மக்கள் முகத்தில் சிரிப்பை தருகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என மோரிஸ் தெரிவித்துள்ளார்.