போட்டி எப்போது?
2019 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 16 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் மோத உள்ளன.
அதிக விண்ணப்பங்கள்
ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் 25,000 இருக்கைகளே உள்ள நிலையில், அந்த போட்டிக்கு சுமார் 4,00,000 நபர்கள் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக உலகக்கோப்பை தொடர் இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவித்தார்.
இதை விட அதிகம்
இது இங்கிலாந்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளின் மோதல் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விண்ணப்பங்களை விட மிகவும் அதிகம் என கூறியுள்ளார் ஸ்டீவ்.
இறுதிப் போட்டி விண்ணப்பங்கள்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டிக்கு 2,30,000 முதல் 2,40,000 டிக்கெட் விண்ணப்பங்களும், உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு 2,70,000 வரையிலான டிக்கெட் விண்ணப்பங்களும் வந்துள்ளன. அதை விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தான் அதிக மக்கள் டிக்கெட் கேட்டுள்ளனர்.
போட்டி நடைபெறுமா?
இப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் காத்திருக்க, அந்த போட்டி நடைபெறுமா என்பதே தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.