போர்ட் ஆப் ஸ்பெயின் : சிபிஎல் 2020 தொடர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரேனாவால் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பெரிய அளவில் நடத்தப்பட்டுவரும் டி20 தொடர் இது.
சிபிஎல் போட்டிகளை இந்திய ரசிகர்களும் வெகு ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இதன் இறுதிப்போட்டி வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு நற்செய்தியாக வரும் 10ம் தேதி சிபிஎல்லின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் முக்கிய உள்ளூர் போட்டியான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் 18ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அற்ற காலி மைதானங்கள் நடந்தாலும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்திய ரசிகர்களும் இந்த போட்டிகளை வெகு ஆர்வமாக டிவியில் கண்டு களித்து வருகின்றனர். இந்த போட்டிகளின் இறுதிப்போட்டி வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக, இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.