கார்த்திக்கிற்கு ஏன் வாய்ப்பு?
தமிழக கிரிக்கெட் வீரருக்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு, சில பேருக்கு பிடித்திருக்காது போலும். இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், இந்திய அணி தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்து தவறு செய்துவிட்டது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் தீபக் ஹூடாவை அணியில் சேர்த்து இருக்கலாம்.
தீபக் ஹூடா
தீபக் ஹூடா இளம் வீரர், அதிரடியாக ஆடக் கூடியவர் சுழற்பந்தும் வீச தெரியும். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பை இந்தியா வீணடித்துவிட்டது. தற்போது முதல் போட்டியில் விளையாடிய அணியை வைத்து தான் அடுத்த 2 போட்டிகளையும் சந்திக்க வேண்டும். காரணம், அணியை அடுக்கடி மாற்றினால், உலக கோப்பைக்கான அணியை தயார் படுத்த முடியாது.
ரவி பிஸ்னாய்
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உள்ளதால் அவரை 3வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்த வேண்டும். அப்போது, ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு பதில் ரவி பிஸ்னாய் உள்ளிட்ட வீரர்களை வைத்து இந்திய அணி அட்டாக் செய்யலாம். சாஹல், பிஸ்னாய் என இருவரும் பிளேயிங் லெவனில் இருந்தால், அது எதிரணிக்கு நெருக்கடியை தரும்.
காரணம் என்ன?
முதல் போட்டியில் நமது பவுலர்கள் சொதப்பினர். ஆனால் என்றாவத இப்படி நடப்பதில் தவறு இல்லை. அடுத்த போட்டியில் பந்துவீச்சாளர்களை எப்படி பந்தவீச வேண்டும். எப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என நம்புகிறேன் என கம்பீர் கூறினார். கம்பீர் வாய்ப்பு தர வேண்டும் என்று கூறிய 2 வீரர்களுமே அவர் பயிற்சியாளராக இருந்த லக்னோ அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.