தொடக்க ஜோடி
இந்த நிலையில், மாயங் அகர்வால், ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 அணியில் இருந்த தொடக்க வீரர் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் அவருக்கு தான் முன் உரிமை வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தான் பி.சி.சி.ஐ. ஒரு டுவிஸ்ட் வைத்தது.
புதிய வீரர்
நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால், ஐ.பி.எல். தொடரில் அபாரமாக விளையாடிய தீபக் ஹூடாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. இதனால் திபக் ஹூடாவும் குஷியாக இருந்தார். ஆனால் போட்டி நாளை தொடங்கும் நிலையில், தேர்வுக்குழு அணியில் புதிய வீரரை சேர்த்துள்ளது.
ஷாரூக்கான்
சையது முஸ்தாக், விஜய் ஹசாரே தொடர்களில் கலக்கிய தமிழக வீரர் ஷாரூக்கான் கடைசி நேரத்தில் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஷாரூக்கானுக்கு நாளை முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணியில் ஃபினிஷர் இல்லாததால் ஷாரூக்கானுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் மாற்றம்?
இந்திய அணியில் ஏற்கனவே வாசிங்டன் சுந்தர் என்ற சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இருப்பதால், தீபக் ஹூடா அணிக்கு தேவைப்பட மாட்டார் என்று தேர்வுக்குழுவினரிடம் ரோகித் சர்மா கூறியதாகவும், இதனால் தான் கடைசி நேரத்தில் இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றன.