ப்ளேயிங் 11 குழப்பம்
இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்வதில் தான் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. அதாவது கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக சொதப்பியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் ஏமாற்றினார். எனவே இன்றைய போட்டியில் அவரை நீக்கிவிட்டு, முழு நேர பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் ஷர்துலை நீக்கிவிட்டு முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
கடைசி நேர ட்விஸ்ட்
இந்நிலையில் அதில் பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து ப்ளேயிங் 11ல் விளையாடவுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அவருக்கு மாற்றாக ருதுராஜ் கெயிக்வாட் அணிக்குள் வரவுள்ளதாகவும் தெரிகிறது. ஓப்பனர்களாக ருதுராஜ் மற்றும் ஷிகர் தவானும், 4வது வீரராக கே.எல்.ராகுலும் விளையாடவுள்ளனர்.
காரணம் என்ன
கடந்த முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் தனது பவுலிங் திறமையை நிரூபிக்க வாய்ப்புகளே கொடுக்கப்படவில்லை. முதல் போட்டி என்பதால் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. எனவே ஒரு போட்டியை வைத்து அவரை ஒதுக்கக்கூடாது என முன்னாள் வீரர் கருத்துக்கள் கூறியதால், திடீரென ஸ்ரேயாஸின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளார் கே.எல்.ராகுல்.
பந்துவீச்சு மாற்றம்
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஏற்கனவே அணியில் வெங்கடேஷ் ஐயர் இருப்பதால், இந்த முறை ஷர்துலை நீக்கிவிட்டு முகமது சிராஜை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் நிச்சயம் வெங்கடேஷ் ஐயரை பவுலிங்கில் பயன்படுத்தி பார்க்க கே.எல்.ராகுல் ஆவலுடன் உள்ளதாகவும் தெரிகிறது.