ஹைதராபாத்: ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பிரிவில் சிந்து பைனலுக்கு தகுதி பெற்றதும், அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவத்தொடங்கியது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்றைய பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் உலகின் 6வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி 10வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அசத்தியிருந்தார்.

சிந்து பைனலுக்கு சென்ற நிலையில் அவரின் சக மாநிலக்காரர் சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே வெளியேறியது, சிந்து ரசிகர்களை கிண்டலின் எல்லைக்கு செல்ல தூண்டியது.
சாய்னா பதிலளித்ததை பார்த்து, தனது தவறை உணர்ந்த அந்த ரசிகர், உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள் என்றும், சரியாக விளையாடவில்லை என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை. நான் இப்போதும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். "ஒரு பிரச்சனையும் இல்லை நண்பா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று சாய்னா அதற்கும் பதில் தெரிவித்தார்.
இதனிடையே சாய்னா ரசிகர்கள், டிவிட்டரில் அன்சுல் சாகரை வறுக்க தொடங்கிவிட்டனர். ஆனால், அவரோ, "என்னுடைய மன்னிப்பை சாய்னா ஏற்றுக் கொண்டதால், யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று டிவிட்டரில் தெரிவித்துவிட்டார்.