
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வீரர் நசிர் ஜம்ஷத்துக்கு பத்து வருட தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிஎஸ்எல் (PSL) எனப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. அதன் இரண்டாவது சீசனின் போது ஏராளமான பிக்ஸிங் புகார்கள் கிளம்பின. அதில் பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது.
