சௌதாம்ப்டன் : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது.
முதல் நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே:
1 மாற்றப்படாத இந்திய அணி
கோஹ்லி தலைமையில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே வீரர்கள் கொண்ட இந்திய அணி பங்குபெறுவது இதுவே முதல் முறையாகும். கோஹ்லி தலைமையில் 38 போட்டிகளில் ஒரு முறை கூட இவ்வாறு நிகழ்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.