For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது?

அகமதாபாத் : பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி ஆகியோர் உலக சாதனை படைத்து நாம் பார்க்க இருக்கிறோம் .

ஆனால் பி சி சி ஐ அப்படி என்ன பெரிய கின்னஸ் சாதனை படைத்தது என்று பல ரசிகர்கள் யோசித்து வந்து இருப்பார்கள். அதற்கு காரணம் நரேந்திர மோடி தான்.

ஒரே செயலால் ஹீரோ.. என்னா மனுசன்யா சஞ்சு சாம்சன்! ஆட்டத்தில் இருந்த நீக்கப்பட்ட பிறகு செய்த காரியம் ஒரே செயலால் ஹீரோ.. என்னா மனுசன்யா சஞ்சு சாம்சன்! ஆட்டத்தில் இருந்த நீக்கப்பட்ட பிறகு செய்த காரியம்

நரேந்திர மோடி மைதானம்

நரேந்திர மோடி மைதானம்

அதாவது பிரதமர் பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு இயங்கும் இந்த மைதானத்தின் மூலம் இந்த பெருமை கிடைத்திருக்கிறது. உலகத்திலே மிக பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் படைத்திருந்தது. அந்த மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் வரை அமரலாம்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அதனை முறியடிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி இருக்கிறது. ஆனால் தற்போது இதற்காக கின்னஸ் சாதனை கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ஐபிஎல் இறுதிப் போட்டி

ஐபிஎல் இறுதிப் போட்டி

இதில் குஜராத்தும் ராஜஸ்தான் அணியும் பலப் பரிட்சை நடத்தின. இதில் ஒரு லட்சத்து ஆயிரத்து 566 ரசிகர்கள் கண்டு களித்தனர். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக மக்கள் கண்டு களித்ததற்கான கின்னஸ் உலக சாதனையாக இது அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழ் தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

உலககோப்பை இறுதிப் போட்டி

உலககோப்பை இறுதிப் போட்டி

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயிஷா ரசிகர்களால் தான் இந்த சாதனை சாத்தியமானதாக நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, November 27, 2022, 23:14 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
BCCI Received guinness record for last crowd gathered for t20 match கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X