ரிஷப் பண்ட் மீது விமர்சனம்
ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட்-ன் வேலை என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் இதுவரை சரியாக திட்டமிடவில்லை. டெஸ்ட் அணியில் முதன்மை வீரராக செயல்படும் பண்ட்-ற்கு, ஒருநாள் அணியில் வாய்ப்பு என்பது சரியான முடிவு தான். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த சதத்தை அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
ரிஷப் பண்டிற்கு ஆதரவு
தேர்வுக் குழுவினர் செய்த தவறு காரணமாக, இந்திய டெஸ்ட் அணிக்காக மறக்க முடியாத வெற்றிகளையும், சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட் மீது வன்மத்தை கொட்டுவது ஏற்புடையதா என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதும் மறுக்க முடியாத வாதம் என்று விமர்சகர்கள் ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக் ஆதரவு
இந்த நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சரியாக விளையாடததால், ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க கூடாது என்பது தவறு. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகளை தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும்.
பிரித்து பாருங்கள்
கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்டின் சராசரி 45. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான சதம் விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதனால் ரிஷப் பண்ட்-ற்கு போதுமான வாய்ப்புகளை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வழங்க வேண்டும். அந்த வாய்ப்புகளிலும் பண்ட் சோபிக்க தவறினால், அணியில் இருந்து நீக்கலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.