கேஎல் ராகுல் மீது விமர்சனம்
ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்த பின் கேஎல் ராகுல் காயமடைந்தார். முக்கிய தொடர்களான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் கம்பேக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு ஃபார்மில்லாமல் இருந்தாலும், கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.
அச்சம்
ஆனால் டி20 உலகக்கோப்பையில் கேஎல் ராகுலின் ஆட்டம் அச்சுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு இல்லை. இந்த நிலையில் மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கூறுகையில், இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் அச்சமின்றி ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும். கேஎல் ராகுலில் மிகச்சிறந்த திறமையான வீரர்.
கேஎல் ராகுல் நீக்கம்?
ஆனால் முதல் சில ஓவர்களில் பந்துகளை தேவையின்றி ஆடாமல் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்திய அணியின் துணை கேப்டனாகவே இருந்தாலும், வரும் காலங்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படலாம். இதனால் அச்சமில்லாமல் ஆட ராகுல் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு
அதேபோல், ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரிலும் களமிறக்கப்பட வேண்டும். அவரது பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை என்று பாராட்டியுள்ளார்.