நேர்காணல் இல்லை
இந்நிலையில், தான் தேர்வு செய்யப்படாதது குறித்து ஜான்டி ரோட்ஸ் கூறியதாவது: எனது நேர்காணல் நன்றாக இல்லை. ஸ்ரீதர் அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது எனக்கே தெரியும். ஏனெனில் அவர் 2 ஆண்டுகளாக இந்திய வீரர்களுடன் களத்தில் இருந்திருக்கிறார்.
காரணம் என்ன?
அணியின் பீல்டிங் தரம் உயர்ந்ததன் மூலம் காணலாம். திட்டமிடல், சரியான பயிற்சி ஆகியவையே இதற்கு காரணம். அது எதுவும் உடனடியாக நடந்து விட்டது அல்ல. எனவே நேர்காணலில் ஸ்ரீதர் என்னை பின்னுக்குத்தள்ளிவிட்டார்.
சிஸ்டம் தெரியும்
ஆனால் நான் தென் ஆப்ரிக்காவைவிட, ஒரு பயிற்சியாளராக இந்தியாவில் தான் அதிகம் பணியாற்றியிருக்கிறேன். 2007ம் ஆண்டு முதல் இருக்கிறேன். ஆகையால், இந்திய கிரிக்கெட் பற்றியும், அதன் பின்பற்றப்படும் சிஸ்டம் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.
சறுக்கல் இருந்தது
முன்னதாக பீல்டிங் பயிற்சியாளர் குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்தும் கருத்து கூறியிருந்தார். அணியின் பீல்டிங்கில் சற்று சறுக்கல் இருக்கலாம். ஆனால் தரமான பீல்டிங் அணியாக உயர்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். அதனால் வேறு யாரையும் அந்த இடத்திற்கு எங்களால் யோசித்து பார்க்க முடியவில்லை என்றார்.