
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில், 400வது விக்கெட்டை வீழ்த்திய புதிய சாதனை படைத்தார் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்திலும் வென்று, 3–0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டன் ஆடம் மர்க்ரமை ஸ்டம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக, 400 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியரானார் பத்மபூஷண் டோணி
