இதுவரை அனுமதியில்லை
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாகிஸ்தான் பிரதமரின் செயலகத்துடன் தொடர்பு கொண்டு பேசினேன். அரசு அனுமதி தொடர்பாக விசாரித்தேன். இதுவரைக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அனுமதி இல்லாமல் போக முடியாது
பாகிஸ்தான் அரசு அனுமதி தராவிட்டால் எங்களால் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அப்படி நடந்தால் ஐசிசி கடும் அபராதம் விதிக்கும் வாய்ப்புள்ளது.
பரிசீலனை செய்வதாக தகவல்
எங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக மட்டும் பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது. விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் என்றார் அவர்.
அனுமதி கிடைக்கும்
இருப்பினும் பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.